நோட்டன் பிரிட்ஜ்
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா டிவிசனில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே 23/02/2021 காலை 10 மணியளவில் தேயிலை செடியினுள்ளிருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இழக்காகிய ஆறுபெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய ஆறு பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
